search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திறந்து வைத்தார்"

    • நாகர்கோவிலை அடுத்த புது கிராமம் பகுதியில் அங்கன்வாடி மையம் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
    • கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக நாகர்கோவிலை அடுத்த புது கிராமம் பகுதியில் அங்கன்வாடி மையம் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

    கோரிக்கையை ஏற்று தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.12 லட்சம் ஒதுக்கப்பட்டு தேரூர் பேரூராட்சி புதுகிராமம் 1-வது வார்டில் அங்கன் வாடி கட்டும் பணி நடந்து முடிந்தது. இதையடுத்து அதன் திறப்பு விழாவில் விஜய்வசந்த் எம்.பி. கலந்து கொண்டு அங்கன்வாடி மையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    முன்னதாக டாக்டர் அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட தலைவர் கே.டி. உதயம், வட்டார தலைவர் காலபெருமாள், குமரி கிழக்கு மாவட்ட எஸ்.சி.,எஸ்.டி. பிரிவு தலைவர் ஜோயல், தங்கம் நடேசன், தேரூர் பேரூராட்சி தலைவர் அமுதா ராணி வின்சென்ட், நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் பென்னி கிரகாம் மற்றும் தேரூர் பேரூராட்சி செயல் அலுவலர்கள் உள்பட ஊர் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

    ×